திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்
Mar 7 2021 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி, இன்று காலை விக்னேஷ்வர பூஜை நடைபெற்றது. கோயில் நிர்வாகம் சார்பில், சமயபுரம் கோயில் இணை ஆணையர் திரு.அசோக்குமார், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் கல்யாணி ஆகியோர் தலைமையில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் உள்ளிட்டோர், யானை மீதும், அவரவர் தலையில் பூந்தட்டுகளை சுமந்துசென்றும் அம்மனுக்கு சாற்றி அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.