நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு பிடாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
Mar 5 2021 5:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு பிடாரி அம்மன் கோவிலில், அம்மன், வீரன் கோவில் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் இரண்டு நாட்களாக கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு விமான கலசங்களில் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கருவறையில் உள்ள மூலவர்களுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.