தைப்பூச திருவிழாவை யொட்டி புதுக்கோட்டை மேல ராஜவீதியில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலில் முதலாம் ஆண்டு தைப்பூச பிரம்மோற்சவ விழா
Jan 25 2021 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தைப்பூச திருவிழாவை யொட்டி, புதுக்கோட்டை மேல ராஜவீதியில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவிலில், முதலாம் ஆண்டு தைப்பூச பிரம்மோற்சவ விழா, பத்து நாட்கள் நடைபெறுகிறது. வரும் 28ஆம் தேதி நடைபெறும் இத்திருவிழாவின் 7ம் நாளான இன்று, சிறப்பு யாகம் செய்யப்பட்டு, மூலவர் தண்டாயுதபாணிக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் யாகத்தின் புனித நீரும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த ஆலய வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.