பொங்கல் தொடர் விடுமுறையால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள் சுவாமி தரிசனம்
Jan 16 2021 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், பொங்கல் தொடர் விடுமுறையால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், சனிப்பெயர்ச்சி விழா கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, நாடு முழுவதிலும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், பொங்கல் தொடர் விடுமுறை காரணமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள், வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.