அய்யா வைகுண்டர் தலைமைப்பதி தைவிழா கொடியேற்றம் - 11 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் 25-ம் தேதி தேரோட்டம்
Jan 15 2021 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
அய்யா வைகுண்டசாமி நடை அதிகாலை திறக்கப்பட்டு அய்யாவுக்கு பணிவிடையும், கொடியேற்றமும் நடைபெற்றது. பக்தர்கள் தலைப்பாகையுடன், காவி நிற உடை அணிந்து பக்தி முழக்கமிட்டு அய்யா வைகுண்டரை வழிபட்டனர்.
11 நாட்கள் நடைபெற்ற அய்யா வைகுண்டர் தைவிழாவில் நாள்தோறும் வாகன பவனி, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, சமய சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வரும் 25-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.