அனுமான் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு : பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
Jan 12 2021 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனுமான் ஜெயந்தியையொட்டி, ஹனுமார் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களில் ஹனுமான் ஜெயந்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதில் ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர். சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள மிகவும் பிரிசிதிபெற்ற அனுமன் கோவிலில். அனுமனுக்கு லட்டு அலங்காரம் செய்யபட்டிருந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.