விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி
Jan 10 2021 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரதோஷம், அமாவாசை மற்றும் பொங்கலை முன்னிட்டு, இன்று முதல் வரும் 14ம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், சதுரகிரி கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.