திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 10 நாட்கள் சொர்க்கவாசல் திறப்பு - திருமலை தேவஸ்தானம் முடிவு
Nov 28 2020 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்க திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து, திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் திரு.ஒய்.வி. சுப்பா ரெட்டி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், 10 நாட்கள் சொக்கவாசல் திறந்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 25ம் தேதி முதல், ஜனவரி 3ம் தேதி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆண்டுதோறும் பக்தர்கள் வருகையைப் பொறுத்து, 2 அல்லது 3 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருப்பதியிலிருந்து திருமலைக்கு பேட்டரியால் இயங்கக்கூடிய சுமார் 150 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருமலை தேவஸ்தான சொத்துகள் குறித்த வெள்ளை அறிக்கை, இக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.