நாளை அருணாச்சலேஸ்வரர் ஆலய கார்த்திகை தீப விழா - மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகாதீப கொப்பரை
Nov 28 2020 11:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அண்ணாமலையர் திருக்கோவில் மலையில் நாளை மகா தீபம் ஏற்றப்படவுள்ள நிலையில், மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தீபத் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை தீபத் திருவிழாவின் நிறைவு நாளாக பரணி தீபமும் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. அதிகாலை 4 மணிக்கு திருக்கோவிலில் அண்ணாமலையார் கருவறையின் முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதனையொட்டி, மகா தீப கொப்பரை இன்று எடுத்துச் செல்லப்பட்டது. தீபக் கொப்பரைக்கு சிறிய நந்தி சந்நதி முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் ஊழியர்கள் 20 பேர் மூலமாக மலை உச்சியின் மீது மகாதீப கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது. 5 புள்ளி 6 அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட இந்த மகா தீப கொப்பரையானது செம்பு உலோகத்தால் செய்யப்பட்டதாகும். 3 ஆயிரத்து 500 கிலோ நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளைப் பயன்படுத்தி நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.