மதுரை கள்ளழகர் கோயிலில் ரூ.46 லட்சம் உண்டியல் காணிக்கை
Nov 27 2020 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அழகர் கோயிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில், ரொக்கமாக 46 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. அழகர் கோயிலில், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை, கோயிலில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் எண்ணப்பட்டன. காணிக்கை எண்ணும் பணியில், திருக்கோயில் பணியாளர்கள், பெண் பக்தர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில், ரொக்கமாக 46 லட்சத்து 27 ஆயிரத்து 803 ரூபாயும், 25 கிராம் தங்கம் மற்றும் 410 கிராம் வெள்ளியும் கிடைத்தன.