சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை : மழை காரணமாக வனத்துறை நடவடிக்கை
Nov 27 2020 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்லும் ஓடைகளில், தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏற்கனவே மலை ஏற வழங்கப்பட்ட அனுமதியை வனத்துறை ரத்து செய்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மழை நீடிக்க வாய்ப்புள்ளதால், சதுரகிரி மலை ஏற விதிக்கப்பட்டுள்ள தடையானது 4 நாட்கள் நீடிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.