திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா - கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்
Nov 26 2020 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 7ம் நாள் தேர் திருவிழாவான இன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் பஞ்ச மூர்த்திகளின் தேரினை வடம் பிடித்து இழுத்து மாடவீதியில் வலம் வருவர். கொரோனா தொற்றால் திருவிழாக்கள் மாடவீதிகளில் நடைபெறாமல், திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் நடைபெற்றது. மழை பெய்து கொண்டிருக்கும் சூழலிலும் கொட்டும் மழையிலும் பக்தர்கள் குடைகளை பிடித்தவாறு திருக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.