அண்ணாமலையார் கோயிலில் பராசக்தி அம்மன் 5-ம் பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
Nov 24 2020 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 4 ஆம் நாளான நேற்றிரவு, பராசக்தி அம்மன், சரஸ்வதி அலங்காரத்தில் 5 ஆம் பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீபத் திருவிழாவின் 4ஆம் நாளான நேற்று, அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு, திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பராசக்தி அம்மன், சரஸ்வதி அலங்காரத்திலும், பஞ்ச மூர்த்திகளுக்கு ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களைக் கொண்ட மாலைகளும் அணிவிக்கப்பட்டு, காட்சி அளித்தனர்.