திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலம் - மோகினி அலங்காரத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி
Oct 20 2020 5:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, உற்சவர் மலையப்ப சுவாமியின் மோகினி அலங்கார சேவை நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 5-ம் நாளான இன்று, உற்சவர் மலையப்பசுவாமியின் மோகினி அலங்கார சேவை நடைபெற்றது. மோகினி அலங்காரத்தில் நீண்ட ஜடை, பட்டாடை, இலைகளால் ஆன பச்சைக்கிளி ஆகியவற்றை அணிந்து, கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தை அடைந்து தங்க பல்லக்கில் எழுந்தருளினார். கிருஷ்ணர், தங்க திருவாச்சியில் எழுந்தருள, ரங்கநாயகர் மண்டபத்தில் மோகினி அலங்கார சேவை நடைபெற்றது.