நாளுக்கு நாள் களைக்கட்டும் புகழ்பெற்ற குலசேகரபட்டிணம் தசரா திருவிழா - மூன்றாம் நாள் திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் பங்கேற்று தரிசனம்
Oct 20 2020 12:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி குலசேகரபட்டினம் தசரா திருவிழாவின், 3-ம் நாளை ஒட்டி, ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் திருவிழா, கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொவங்கியது. திருவிழாவின் 3-ம் நாளான நேற்று, அம்மன் ரிஷப வாகனத்தில், பார்வதி திருகோலத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்திலேயே உலா வரும் நிகழ்சி நடைபெற்றது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக இதில் உள்ளூரை சேர்ந்த பக்தர்கள் மட்டுமே பங்கேற்று தரிசனம் செய்தனர்.