ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு - போலீசார் தீவிர வாகன சோதனை
Sep 27 2020 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதினம் காரணமாக, ராமேஸ்வரம் கோயிலுக்கு இன்று பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் திரு.வீரராகவ ராவ் உத்தரவின்பேரில், தீவிர வாகன சோதனை நடைபெறுகிறது. வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் வாகனங்கள் முழுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே ராமேஸ்வரம் தீவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன. முகக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.