புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி வைணவ தலங்களில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் - சென்னை பார்த்தசாரதி கோயிலில் குவிந்த பக்தர்கள்
Sep 26 2020 2:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை வணங்குவது பல்வேறு பலன்களை தரும் என்பது ஐதீகம். குறிப்பாக, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையான இன்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அதிகளவில் கூடினர். முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலினுள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி கொடுக்கப்பட்டு, வெப்பநிலை கண்டறியப்பட்டது.