சதுரகிரி கோயிலுக்குச் சென்ற 4 பேருக்கு கொரோனா உறுதி
Sep 20 2020 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி கோயிலுக்கு, மகாளய அமாவாசையையொட்டி ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்த நிலையில், அவர்களில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிவகாசி, மதுரை, தேனி, திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பக்தர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.