சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் நாள்தோறும் 5,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி - திருவாங்கூர் தேவஸ்தானம்‍ போர்டு அறிவிப்பு

Sep 20 2020 12:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், இனி வரும் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில், ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும் உள்ள வழிபாட்டுத் தலங்கள் சில மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கின் போது வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சபரிமலை ஐயப்பன் கோவிலில், பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, மண்டல - மகர விளக்கு பூஜை காலங்களில், ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும், சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது - பக்தர்கள் அனைவரும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் - நிலக்கல்லில் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும் - பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பன போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00