திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடக்கம் : கொரோனா காரணமாக பிரம்மோற்சவ விழா வாகன சேவையை ரத்து செய்தது தேவஸ்தானம்
Sep 19 2020 10:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்குகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று தொடங்கி வரும் 27-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த பிரம்மோற்சவத்தைக் காண நாள்தோறும் லட்சணக்கான பக்தர்கள், நான்கு மாடவீதிகளில் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்தாண்டு கொரோனா காரணமாக பிரம்மோற்சவ விழா வாகன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
எனினும் கோவிலில் நடைபெறக்கூடிய அனைத்து சேவைகளும் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.