அரியலூரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
Sep 18 2020 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரியலூரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பொதுமக்கள் தரிசனத்துக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். தற்போது கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்கள் காலை 6மணி முதல் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முடிகாணிக்கை செலுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 6 அடி இடைவெளியில் 300 பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.