மஹாளய அமாவாசையை யொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
Sep 17 2020 3:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், மஹாளய அமாவாசையை யொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மாதந்தோறும் அமாவாசை தினத்தில் 4 நாட்களுக்கும், பெளர்ணமி தினத்தில் 4 நாட்களுக்கும் மட்டுமே இக்கோயிலில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன்படி, கடந்த 15-ம் தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு, பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமியை தரிசித்தனர்.