புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் பக்தர்கள் வழிபாடு - கொரோனா தடுப்பு வழிமுறைகள் கடைபிடிப்பு
Sep 17 2020 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாத பிறப்பையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் தரிசனம் செய்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஒரு மணி நேரத்திற்கு 300 பேர் வீதம், டோக்கன் வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் கிருமி நாசினி கைகளில் தெளிக்கபட்ட பின்னர், முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே நம்பெருமளை தரிசிக்க அனுமதிக்கின்றனர். புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் கட்டணமில்லா தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்தால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்படுவர்கள் என கோயில் இணை ஆணையர் திரு.ஜெயராமன் தெரிவித்துள்ளார்.