மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடி பிரமோற்சவ திருவிழா - புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார் சுந்தரராஜ பெருமாள்
Aug 6 2020 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் ஆடி பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு, சுந்தரராஜ பெருமாள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளினார்.
உலகப்புகழ்பெற்ற மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடைபெறும். இந்தாண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் இல்லாமல்இன்றி ஆடி பிரமோற்ச திருவிழா, கடந்த 26 ஆம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெற்றது. கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், தங்க பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். பத்தாம் நாள் திருவிழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மாலை புஷ்ப பல்லாக்கில் சுந்தரராஜபெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பின்னர் மூலஸ்தானத்திற்க்கு சென்று காட்சி அளித்தார்.