அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து மணல் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பிவைப்பு
Aug 4 2020 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி நாளை தொடங்கவுள்ள நிலையில், சீதாதேவி மணலால் லிங்கம் செய்து வழிபாடு நடத்திய ராமேஸ்வரத்திலிருந்து மணல் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட சீதா தேவியை இலங்கையிலிருந்து மீட்டு ராமபிரான் அழைத்து வந்த முதல் இடம் ராமேஸ்வரம் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது. ராவணனை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், சீதாதேவி மணலால் சிவலிங்கத்தை உருவாக்கி பூஜை செய்து வழிபாடு நடத்தியதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமபிரான், ஈஸ்வரனை வழிபாடு செய்த தலம் என்பதால்தான் இந்த ஊருக்கு ராமேஸ்வரம் என்று பெயர் வந்ததாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில் ராமபிரானுக்கு அவர் பிறந்த அயோத்தியில் கோவில் கட்டும் பணி நாளை தொடங்க உள்ள நிலையில், ராமேஸ்வரத்தில் சீதாபிராட்டி மணலால் லிங்கம் செய்து வழிபாடு நடத்திய இடத்திலிருந்து மணல் சேகரிக்கப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.