கடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு இடையே, மெக்கா நகரில் நடைபெற்ற சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
Aug 1 2020 10:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு இடையே, மெக்கா நகரில் நடைபெற்ற சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
நவீன வரலாற்றில், சவுதி அரேபியாவில் நடைபெறும் ஹஜ் தொழுகையில் வெளிநாட்டினர் யாரும் பங்கேற்க முடியாத நிலை இந்த ஆண்டில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டினர் யாருக்கும் அனுமதியளிக்காத சவுதி அரேபியா, உள்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதியளித்தது. இதனடிப்படையில் நேற்று முன்தினம் மினாவிலிருந்து புறப்பட்டு, அராபத் குன்றுகளில் பொழுதைக் கழித்த பயணிகள், அதற்கு அடுத்த நாளான நேற்று, சாத்தான் மீது கல்லெறியும் முக்கிய விழாவில் பங்கெடுத்தனர். தூய்மையைக் குறிக்கும் வகையில் வெண்மையான உடையணிந்த ஹஜ் பயணிகள், மினாவிலிருந்து கொண்டுவந்திருந்த கற்களை சாத்தான் மீது வீசியெறிந்து கடமையை நிறைவேற்றினர்.