நாகர்கோவிலில் புனித அல்போன்சா திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Jul 27 2020 2:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியாவில் முதல் பெண் புனிதர் பட்டம் பெற்றவர் அல்போன்சா. இவரது ஆலயம் நாகர்கோவிலில் உள்ள மறவன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளது. திருதலத்தில் வழக்கமாக பத்து நாட்கள் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரானா தடை உத்தரவு காரணமாக மூன்று நாட்கள் மட்டுமே விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கொடியேற்ற விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் நவநாள் ஜெபம் மற்றும் திருப்பலி உள்ளிட்ட பிராத்தனைகள் நடைபெற்றன. சமூக இடைவெளி காரணமாக பங்குதந்தை உள்ளிட்ட சிலர் மட்டுமே விழாவில் பங்கேற்றனர்.