ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாயகி தாயாருக்கு ஆனி திருமஞ்சனம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது
Jul 10 2020 2:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாயகி தாயாருக்கு ஆனி திருமஞ்சனம் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 3ம்தேதியன்று ரெங்கநாதருக்கு ஆனித்திருமஞ்சனம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, மிகவும் விஷேசமான இன்று ரெங்கநாயகி தாயாருக்கான ஜேஷ்டாபிஷேகத்தின்போது அம்மாமண்டபம் புனித திருக்காவிரியிலிருந்து வெள்ளிக்குடங்களில் நிரப்பப்பட்ட திருமஞ்சன நீர் கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாளை தாயாருக்கு திருப்பாவாடை சாற்றும் வைபவம் நடைபெறுகிறது.