திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று - தேவஸ்தான நிர்வாகிகள் அவசர ஆலோசனை
Jul 3 2020 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உட்பட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால் 3 மாதங்களுக்கும்மேல் மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் கடந்த மாதம் 8ம் தேதி திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பதி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் ஒருவருக்கும், 4 வாத்தியக்காரர்கள், மற்றும் 5 பாதுகாவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் நாளை அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.