பழனி கிராமங்களில் ஊரடங்கால் 3 மாதத்திற்குப்பின் சிறிய கோயில்கள் திறப்பு : பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம்
Jul 1 2020 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கிராமங்களில், அரசின் உத்தரவை அடுத்து சிறிய கோயில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக, 3 மாதங்களுக்குப் பிறகு சிறிய கோயில்களைத் திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி ஊராட்சியில் பஞ்சமுக ராமஆஞ்சநேயர் கோயில், புளியம்பட்டியில் அமிர்தலிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் திறக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.