சபரிமலையில் ஆனி மாத பூஜைகள் - பக்தர்களுக்கு அனுமதி இல்லை
Jun 15 2020 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் ஆனி மாத பூஜைகள் நடைபெறுகின்றன. ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை, நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. வரும் 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத பூஜைகளின் போது வழக்கமாக நடத்தப்படும் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், புஷ்பாபிஷேகம் ஆகிய பூஜைகள் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.