கொல்லத்தில் கொரோனாவுக்கு கோவில் : மிகுந்த அர்ப்பணிப்புடன் நடைபெறும் பூஜைகள்
Jun 13 2020 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. வைரசின் தோற்றத்தை சிலையாக நிறுவி அதற்கு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக, கேரளாவை சேர்ந்த அணிலன் என்பவர் கொரோனா தேவி கோவிலை உருவாக்கியுள்ளார். கொல்லம் மாட்டத்தின் கடக்கல் என்ற இடத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இது யாரையும் கேலி செய்யும் முயற்சி அல்ல என்றும், பூஜைகள், மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படுவதாகவும், கடவுள் எங்கும் நிறைந்தவர் என்ற அடிப்படையில் கோவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அணிலன் தெரிவித்துள்ளார். பெரியம்மை நோய்க்கென தனி தெய்வம் கேரளாவில் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.