குருவாயூர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை - கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரள அரசு முடிவு
Jun 13 2020 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் கடந்த 9 ம் தேதி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கோவில் நிர்வாகம் முடிவு எடுத்தாக கூறப்பட்டது. இதனையடுத்து இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இதேபோல் சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்ற தந்திரி மோகனரு கண்டரரு கூறியதையும் கேரள அரசு ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.