திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் - இன்று முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி
Jun 11 2020 11:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டது. இந்நிலையில் 5ம் கட்ட ஊரடங்கில் கொண்டுவரப்பட்ட தளர்வுகள் காரணமாக வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து பக்தர்களின் தரிசனத்திற்காக திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த 8-ம் தேதி திறக்கப்பட்டது. 8, 9 மற்றும் 10-ம் தேதிகளில் உள்ளூர் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சோதனை முறையில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று முதல் அனைத்து பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 300 ரூபாய் டிக்கெட்டுகள், 3 ஆயிரம் எண்ணிக்கையில் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.