புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் நாளை முதல் திருமணம் நடத்தலாம் - கேரள மாநில அரசு அறிவிப்பு
Jun 3 2020 2:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரள மாநிலம் திருச்சூரில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற குருவாயூர் கோயிலில் திருமணம் நடத்த அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 60 திருமணங்கள் நடத்தலாம் என்றும், காலை 5 மணு முதல் 12 மணி வரை திருமணங்கள் நடைபெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகளும் தொடங்கியுள்ளது. இக்கோயிலில் திருமணம் செய்பவர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றிதழை புகைப்படத்துடன் வழங்க வேண்டும் என்றும் குருவாயூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.