காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் ரத்து
May 31 2020 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, காஞ்சிபுரம், தேவராஜ பெருமாள் திருக்கோவில் ஆண்டு தோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இத்திருக்கோயிலின் புகழ்பெற்ற கருடசேவை, தேர் திருவிழா உள்ளிட்ட உற்சவ விழாக்கள் மற்றும் வைகாசி மாத பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது.