திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை ஏலம் விடும் விவகாரம் - தற்காலிகமாக நிறுத்தி வைத்தது ஆந்திர அரசு

May 26 2020 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகளை ஏலம் விடுவதை, ஆந்திர மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். காணிக்கையாக தங்களுடைய நிலங்களை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஏராளமான சொத்துக்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உள்ளது. சில நிலங்கள் பாதுகாக்க முடியாமல் இருப்பதாகவும், அவற்றை பலர் அபகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே தமிழகத்தில் உள்ள 23 சொத்துக்களை ஏலமிட்டு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கோயம்புத்தூர், நாகப்பட்டினம், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 23 விவசாய நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளை விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது பற்றிய தகவல் வெளியானதும் பக்தர்கள் மத்தியில் பெரும் கவலை சூழ்ந்தது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் சொத்துகளை ஏலம் விடுவதை ஆந்திர மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00