திருப்பதி லட்டு 50 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை - தேவைக்கு ஏற்ப எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளவும் ஏற்பாடு
May 21 2020 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதியில் பாதி விலையில் லட்டு விற்பனை செய்யப்படவுள்ளதால் மொத்தமாக தேவைப்படுபவர்கள் ஆர்டர் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் திரு. சுப்பா ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று ஏழுமலையான் லட்டு பிரசாதத்தை பாதி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதாவது 50 ரூபாய்க்கு பதிலாக 25 ரூபாய்க்கு நாளை மறுநாள் முதல் ஆந்திராவில் உள்ள அனைத்து தேவஸ்தான தகவல் மையங்களிலும் லட்டு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.