பொது ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கிராமக் கோயில் பூசாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் - நிவாரண உதவி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை
May 20 2020 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா ஊரடங்கால், மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமக் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான கருமாத்தூர், தும்மகுண்டு, பாப்பாபட்டி, நாட்டாமங்கலம் போன்ற கிராமங்களில் மிகப் பழமையான கிராமக் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில், கோவில் பூசாரிகள், பராமரிப்பாளர்கள் என, ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால், அவர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர். வருமானமின்றித் தவித்து வரும் தங்களுக்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.