தமிழகத்தில் கோயில் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதி
May 7 2020 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் உள்ள கோயில்களின் அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் சில பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயில் அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்க, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. பணியாளர்கள் தேவைக்கேற்ப சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்றி, மூகக்கவசங்கள் அணிந்துகொண்டு பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து கோயில் அலுவலகங்களிலும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த பணியாளர்களை அனுமதிக்ககூடாது என்றும், கோயில் வளாகத்தில் பணியாளர்கள் தவிர பக்தர்கள் யாரையும் அனுமதிக்ககூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.