ஊரடங்கு உத்தரவால் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவிழா ஒத்திவைப்பு
Apr 5 2020 3:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெறவிருந்த பிரசித்திப் பெற்ற அறுபத்து மூவர் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரசித்திபெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு பங்குனி பெருவிழா மார்ச் 29ம் தேதி பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் திருவிழா இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பங்குனி பெருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் பங்குனி பெருவிழா எனும் அறுபத்து மூவர் திருவிழா நடைபெறாமல் ஒத்திவைப்பது இதுவே முதன்முறை என அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் திரு.நடராஜன் தெரிவித்துள்ளார்.