தஞ்சை பெரிய கோயிலில் இம்மாத இறுதிவரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Mar 18 2020 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தஞ்சை பெரிய கோவில் இம்மாத இறுதி வரை மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு வரும் நிலையில் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இன்று முதல் 31-ஆம் தேதி வரை கோவில் மூடப்படுவதற்கான அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டு கோயில் கதவுகள் சாத்தப்பட்டன. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள், கோயிலைத் திறக்குமாறு விடுத்த கோரிக்கையையும் அதிகாரிகள் நிராகரித்து விட்டனர்.