கொரோனா வைரஸ் பாதிப்பின் காணமாக காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்த பின்னரே பக்தர்களுக்கு அனுமதி
Mar 17 2020 6:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பாதிப்பின் காணமாக, காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில்களில், பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆலயங்களுக்கு வருகை தரும் பக்தர்கள் மூலம், கொரானா வைரஸ் பரவாமல் தடுத்திட, இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோயில்களுக்கு வரும் பக்தர்கள், கிருமி நாசினி கொண்டு அவர்களது கைகள் சுத்தம் செய்த பின்னர், உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.