சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி கோயிலில் உலக நன்மைக்காக சிறப்பு யாகங்கள்
Mar 15 2020 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி ஸ்ரீபாதம் டிரஸ்ட் சார்பில், உலக நன்மைக்காக சுதர்சன ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகின்றன.
உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி, சென்னை திருவல்லிக்கேணியில் சுதர்சன ஹோமம், பூஷாசுப்து ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் வெகு விமரிசையாக நடைபெற்றன. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி ஸ்ரீபாதம் டிரஸ்ட் சார்பில், உலக மக்கள் நன்மைக்காக இந்த ஹோமங்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். இந்த டிரஸ்ட் சார்பில், ஆண்டுதோறும் நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் உள்ளிட்ட பூஜைகளும் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.