தமிழகத்தில் கொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - ஸ்ரீரங்கம் ஆலயத்தில் பக்தர்களுக்கு கொரனோ பரிசோதனை
Mar 14 2020 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, கொரனோ வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள், ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் வருவதை தவிர்க்க வேண்டும் என, கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதார துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட வருகின்றனர்.
இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில், நளன் குளத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நளன் குளத்தில் இருந்த நீர் முழுவதும், ராட்ச குழாய் மூலம் வெளியேற்றப்பட்டது.