காய்ச்சல், இருமலுடன் திருநள்ளாறு ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் - கொரோனா அச்சுறுத்தலையடுத்து ஆலய நிர்வாகம் வேண்டுகோள்
Mar 13 2020 1:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உடல்நலம் குன்றியவர்கள், மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என, சமூகவலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என கோயில் இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா எதிரொலியாக, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திற்கு, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு, வரவேண்டாம் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இச்செய்தியை, கோயில் இணை ஆணையர் திரு. நடராஜன் மறுத்துள்ளார். கோவில் நிர்வாகத்தின் சார்பில், போதிய விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கோயிலுக்கு வரலாம் என்றும், இது போன்று எவ்வித அறிவிப்பு நிர்வாகம் வெளியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறு, தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு, உடல்நலக் குறைவுள்ள பக்தர்கள் வரவேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,
வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள், வெளிநாட்டினர் இக்கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.