திருப்போரூர் முருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம் வைபவம் - திரளான பக்தர்கள் தரிசனம்
Feb 28 2020 6:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செங்கல்பட்டு திருப்போரூர் முருகன் கோயிலில், பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற வைபவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கொடிமரம் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றன. இதையடுத்து மேளதாளங்கள் முழங்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத, கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான, திருத்தேரோட்டம் மார்ச் மாதம் 5-ம் தேதி நடைபெறுகிறது.