திருச்சி திருவானைக்காவல் கோயிலில் தங்க புதையல் கண்டெடுப்பு
Feb 27 2020 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி திருவானைக்காவல் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்க புதையல், மாவட்ட வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஆலயத்தில் உள்ள விநாயகர் சந்நிதிக்கு பின்புறம் உள்ள தோட்டத்தை, ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செப்பு பாத்திரம் ஒன்றில் இருந்து 3 புள்ளி 5 கிராம் முதல், 3 புள்ளி 8 கிராம் எடை கொண்ட, 504 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நாணயங்கள், ஸ்ரீரங்கம் தாசில்தார் முன்னிலையில், திருச்சி மாவட்ட வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. நாணயங்கள் மதிப்பு, எந்த காலத்தை சேர்ந்தவை? உள்ளிட்டவைகள் குறித்து, தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.