திண்டுக்கல் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி : சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய காளையர்கள்

Feb 26 2020 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்‍கட்டுப் 550 காளைகள் களமிறக்‍கப்பட்டுள்ளன. சீறிப்பாய்ந்த காளைகளை, வீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்‍கினர்.

திண்டுக்கல் அடுத்துள்ள பில்லமநாயக்கன்பட்டி ஸ்ரீகதிர் நரசிங்க பெருமாள் கோவில் திருவிழாவை யொட்டி நடைபெற்ற போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 550 ஜல்லிக்கட்டு காளைகள் களமிறக்‍கப்பட்டன. 400 மாடுபிடி வீரர்கள் ஆர்வமுடன் இதில் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, வீரத்துடன் அடக்‍கி இளைஞர்கள் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

ஜல்லிக்‍கட்டில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்‍கு ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பீரோ, சேர், தலைகவசம், சைக்கிள், அண்டா, மின்விசிறி, உள்ளிட்ட பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. இதேபோல், அடங்க மறுத்த காளையின் உரிமையாளர்களும் பரிசு மழையில் நனைந்தனர். ஜல்லிக்‍கட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00