நாடு முழுவதும் மகாசிவராத்திரி கொண்டாட்டம் - சிவாலயங்களில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் லட்சக் கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம்
Feb 21 2020 7:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை உட்பட தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கியுள்ளன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இருந்து மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள், இன்றுகாலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சிவபெருமானை வழிபட்டு வருகின்றனர்.